Thogai Ilamayil

Thogai Ilamayil Song Lyrics In English


தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ

கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ


பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

அருவிகளோ ராகந் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ