Tholil Vizhum Malaiye

Tholil Vizhum Malaiye Song Lyrics In English


ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை மன்னன் தான் பாடக் கூடுமோ பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல் இளமை நில் என்று கூறுமோ பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும் கடலில் இல்லாமல் ஓடுமோ ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையேஏஏ பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம்


பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும் கோடை போல் இன்று ஆனதே ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள் ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள் தேனில் தேனாகச் சேர்ந்ததே ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும் புதிய ராகங்கள் பாடுதே பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையேஏ பெண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன்

பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையேஏ ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையேஏ