Thom Karuvil Irunthom |
---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையேஏஏ
தண்ணீரில் வாழ்கின்றேன்
நாம் கூட மச்சாவதாரம் தான்
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
அலைகளை அலைகளை
பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
கவலைக்கு மருந்து
இந்த ராஜா தவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை
கையில் கோப்பை
இல்லை என்றால்
கற்பனை வரைவது நின்று விடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உடல் தின்று விடும்
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே
ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையின் பிடிமானம்
ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம்
வேரு இல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா
பெண்ணுக்குள் தொடங்கும்
வாழ்க்கை இதுஆஆஆஆஅ
மண்ணுக்குள் முடிகிறதே
ஆஆஆஆஅ
விஷயம் தெரிந்தும் மனித இனம்
ஆஆஆஆஅ
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே
ஆஆஆஆஅ
தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையேஏஏ