Thookanaan Kuruvi Koodu

Thookanaan Kuruvi Koodu Song Lyrics In English


தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய கண்ணிலே
பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய கண்ணிலே

பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்பு தெரியல
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்பு தெரியல

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா
ஆஆஆஆஅஆ

அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா

கம்மான் கையில்
பொன்னை வாங்கி
கட்டிக்கொள்ள வேண்டாமா
கம்மான் கையில்
பொன்னை வாங்கி
கட்டிக்கொள்ள வேண்டாமா


கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே

கூரைக் குடிசை நடுவிலே
அந்த படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப் போட்டு

கூரைக் குடிசை நடுவிலே
அந்த படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப் போட்டு

ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு

ஆனானப் பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு
ஆனானப் பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு
அத விட்டு

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே