Thoonga Kangal |
---|
தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ
ஊனா உயிரா
ரெண்டும் ஒன்று ஒன்றில்
ஒன்றாய் உருகும் நெஞ்சம்
நெஞ்சில் நீதான் தீராய் நீயோ
முகத்தினை
மூடாமல் அகத்திணை
தா விரும்பினேன் வாழ
திரும்பி நீயும் வா காதல்
மாறி ஊடல் ஆகி கானல்
ஆனாய் நியாயமா
பொன் விடியலை
உன்னில் கண்டேன் போதும்
என்றும் தூர வானத்தை
கண்ணில் கண்டேன் காலம்
உருகும் முன் வானம் விரியும்
தருணம்
சிறகுகளை
விரிக்கும் பாரத்தில்
நாளும் நீளும் கனவுகளில்
கரைந்து போகையில்
ஆகாயம் மூடினால்
தாண்டுவேனோ ஆகாயம்
தான் எல்லையோ நீ வா
தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ
அகத்திணை
மூடாமல் முகத்தினை
தாராய் திரும்பினேன்
வாழ விரும்பி நீயும்
வா காயம் மாற நானும்
நீயும் கூடல் ஆனால்
சோகம் தீரும் ஊடல்
ஆகி காதல் மாறி தூங்கா
கண்கள் தூங்குமா