Thoppile Irunthaalum |
|---|
ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால்
ஆலிலைகள் என்னாகும்
அடி மேல் அடி விழுந்தால்
மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்
வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
எவனாலும் சொல்ல முடியாது போடா
வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்
தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
தாய் தந்தை ஆனாலும்
தாரமாக இருந்தாலும்
தலைவலியே உனக்கு வந்தால்
தாங்கிக் கொள்ள முடியுமா
தமையனாக ஆனாலும்
தங்கையாக இருந்தாலும்
உனது நெஞ்சின் துயரம் அதை
மாற்றிக் கொள்ள முடியுமா
அட மண்ணை பிளந்து போடு
மண்ணு உன்னை தாங்கும் பாரு
அதைப் போல நீயும் மாறு
துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
இங்கு மாறாது மாறாது வானம்தான்
தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
வேஷம் போட்டு வந்தவர் தான்
எத்தனையோ மேடையிலே
ஆடியவர் யார் யாரோ
அத்தனையும் பார்த்தேனே
வீடும் இங்கு காடாச்சு
வேடந்தாங்கல் போலாச்சு
வந்த பறவை பறந்தாச்சு
ஓய்வு காலம் போயாச்சு
வலி தாங்கி பழகிப் போச்சு
இடி தாங்கிக் கம்பி ஆச்சு
இங்கு மேடு பள்ளம் ஏது
குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
எது வந்தால் என்ன
வந்து போனால் என்ன
என்றும் மாறாது மாறாது வானம்தான்
தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
