Thoppile Irunthaalum

Thoppile Irunthaalum Song Lyrics In English


ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால்
ஆலிலைகள் என்னாகும்
அடி மேல் அடி விழுந்தால்
மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்
வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
எவனாலும் சொல்ல முடியாது போடா
வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்

தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்

சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா

தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்

தாய் தந்தை ஆனாலும்
தாரமாக இருந்தாலும்
தலைவலியே உனக்கு வந்தால்
தாங்கிக் கொள்ள முடியுமா
தமையனாக ஆனாலும்
தங்கையாக இருந்தாலும்
உனது நெஞ்சின் துயரம் அதை
மாற்றிக் கொள்ள முடியுமா

அட மண்ணை பிளந்து போடு
மண்ணு உன்னை தாங்கும் பாரு
அதைப் போல நீயும் மாறு
துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
இங்கு மாறாது மாறாது வானம்தான்

தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்


வேஷம் போட்டு வந்தவர் தான்
எத்தனையோ மேடையிலே
ஆடியவர் யார் யாரோ
அத்தனையும் பார்த்தேனே

வீடும் இங்கு காடாச்சு
வேடந்தாங்கல் போலாச்சு
வந்த பறவை பறந்தாச்சு
ஓய்வு காலம் போயாச்சு

வலி தாங்கி பழகிப் போச்சு
இடி தாங்கிக் கம்பி ஆச்சு
இங்கு மேடு பள்ளம் ஏது
குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
எது வந்தால் என்ன
வந்து போனால் என்ன
என்றும் மாறாது மாறாது வானம்தான்

தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்

சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா

தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்