Thoranam Aayiram |
---|
பெண்கள் : பூலோக தேவர்கள் வாழ்த்திடவே
தேவார பாடல்கள் முழங்கிடவே
அம்மியும் அருந்ததியும் காத்திருக்க
புது வாழ்க்கை தொடங்கிடுதே
ஹோ ஹோ ஓ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஓ
பெண்கள் : தோரணம் ஆயிரம்
சூடிடும் திருமணமே
சாமரம் வீசிட
வந்திடு முகில் இனமே
சம்மதம் கண்களில் வழங்க
சங்கமம் என்றிவள் மயங்க
சம்மதம் கண்களில் வழங்க
சங்கமம் என்றிவள் மயங்க
கனவுகள் ஆயிரம் இனி இங்கு பிறந்திடும்
வான் விட்டு இள மதி வாழ்த்திட இறங்கிடும்
பெண்கள் : தோரணம் ஆயிரம்
சூடிடும் திருமணமே
சாமரம் வீசிட
வந்திடு முகில் இனமே
பெண்கள் : நாளும் கூடியது
மாலை சூடி வர
யாழும் குழலும்
இங்கு இசைகிறதே
வாழ்த்து கடிதங்களை
காற்று படித்திடவே
வானவில்லின் நிறம் கூடியதே
பெண்கள் : எதுகை மோனை ரெண்டும்
இணையும் கவிதை கண்டு
எதுகை மோனை ரெண்டும்
இணையும் கவிதை கண்டு
குயில்கள் பாட்டிசைக்க ஓடிவரும்
கான கிளியுமுண்டு
மனமும் இதற்க்கு ரெண்டு
நாளும் கூடலிசை பாடி வரும்
பெண்கள் : இவனொரு யாசகன்
இவளுக்கு வாசகன்
இரு விழி தேடி பூ மனம் தேன்
இவள் முகம் சூரியன்
ஒளி தரும் நிலவென
குளிர்ந்திடும் உறவிது
பெண்கள் : தோரணம் ஆயிரம்
சூடிடும் திருமணமே
சாமரம் வீசிட
வந்திடு முகில் இனமே
பெண்கள் : வானம் பொழிந்துவிடும்
நாணம் நனைந்துவிடும்
மோகம் கொண்ட
மனம் முளைவிடுமே
காம கூண்டு கிளி
வானம் அதற்கு தனி
காவல் இனியும் இல்லை பறந்திடுமே
பெண்கள் : உறவு அரும்பியது
உலகம் திரும்பியது
உறவு அரும்பியது
உலகம் திரும்பியது
சொர்க்கம் அருகில் வர விரும்பியதே
மலரின் வாசம் கொஞ்சம்
மனதில் நேசம் தஞ்சம்
மகிழ்ந்து வாழ மனம் மயங்கியதே
பெண்கள் : இது ஒரு ஆரம்பம்
வீதி எங்கும் தேர் வரும்
இரு மனம் வாழ்ந்திட
வரம் தருமே
உறவுகள் ஆயிரம்
மகிழ்ந்து இங்கு கூடிட
முகிலினை நிலவது
சுகம் தரும் இது தவம்
பெண்கள் : தோரணம் ஆயிரம்
சூடிடும் திருமணமே
சாமரம் வீசிட
வந்திடு முகில் இனமே
சம்மதம் கண்களில் வழங்க
சங்கமம் என்றிவள் மயங்க
சம்மதம் கண்களில் வழங்க
சங்கமம் என்றிவள் மயங்க
கனவுகள் ஆயிரம் இனி இங்கு பிறந்திடும்
வான் விட்டு இளமதி வாழ்த்திட இறங்கிடும்
பெண்கள் : தோரணம் ஆயிரம்
சூடிடும் திருமணமே
சாமரம் வீசிட
வந்திடு முகில் இனமே