Thotta Idam Thulanga

Thotta Idam Thulanga Song Lyrics In English


அரியதாய் பெரியதாய்
வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய்
மனதிலே நிறைந்ததாய்
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய்எங்கள் தாய்

தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

கண் பட்ட இடம் பூ மலரும்
பொன் மகளே வருக
பொன் மகளே வருகநீ வருக

கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
கோவில் கொண்ட நீயே

பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே


தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

இதயம் உன்னைப்பாடும்
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன்
புன்னகை ஆறுதல் கூறும்

வாவென வேண்டிடும்போது
எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்

தலைவியாகிய தாயே
ஒரு தலைவியாகிய தாயே