Thottathu Pole Kanavu |
---|
தொட்டது போலக் கனவு கண்டேன்
தூக்கக் கலக்கமா
என் தோளைக் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா
தொட்டது போலக் கனவு கண்டேன்
தூக்கக் கலக்கமா
என் தோளைக் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா
கட்டிய பூவில் வண்டு விழுந்து
ஆடிடக் கண்டேனே
கட்டிய பூவில் வண்டு விழுந்து
ஆடிடக் கண்டேனே
கங்கையின் வெள்ளம் மங்கையின் அழகில்
ஓடிடக் கண்டேனே
தொட்டது போலக் கனவு கண்டேன்
தூக்கக் கலக்கமா
என் தோளைக் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா
மாமன் மகளே மணிக்கிளியே
மன்னர் குலத்து இளங்கொடியே
மாமன் மகளே மணிக்கிளியே
மன்னர் குலத்து இளங்கொடியே
யாரென என்னை அறிவாயோ
அறிந்த பின்னாவது தருவாயோ
யாரென என்னை அறிவாயோ
அறிந்த பின்னாவது தருவாயோ
கள்ளனைப் போலத் தெரியுதய்யா
காமுகன் போலவும் தோணுதய்யா
ஆஹா என்ன வார்த்தை ககூறினாய்
கள்ளனைப் போலத் தெரியுதய்யா
காமுகன் போலவும் தோணுதய்யா
பள்ளியறைக்குள் மெல்ல நுழைந்து
பாதம் தழுவிய காரியமென்ன
அய்யய்ய காரியமென்ன
அய்யய்ய காரியமென்ன
ஐந்து பேர்கள் பாண்டவராம்
அவரில் ஒருவர் பார்த்திபனாம்
காதல் மன்னன் பார்த்திபனின்
காதல் மன்னன் பார்த்திபனின்
காளையடியோ நானடியோ
அர்ஜுனன் மகன் நீதானா
அவன் அர்த்த ராத்திரியில் வருவானா
அர்ஜுனன் மகன் நீதானா
அவன் அர்த்த ராத்திரியில் வருவானா
என்னை மணமுடித்த மன்னன் புலந்திரன்
கள்வனை போல் வந்து தொடுவானா
கள்வனை போல் வந்து தொடுவானா
உறவினன் போல எ னைத் தெரியவில்லையோ
அந்த உருவத்தில் யாரென்று புரியவில்லையோ
அம்மா உறவினன் போல எ னைத் தெரியவில்லையோ
அந்த உருவத்தில் யாரென்று புரியவில்லையோ
எனைக் கட்டிப்பிடி சட்டப்படி கட்டுக்கொடி
முத்துக்கிளியே மங்கையே
எனைக் கட்டிப்பிடி சட்டப்படி கட்டுக்கொடி
முத்துக்கிளியே மங்கையே
உனை அந்திரத்தில் கொண்டு செல்லும்
மந்திரத்தில் கண்டு கொள்ளு என்னையே
உனை அந்திரத்தில் கொண்டு செல்லும்
மந்திரத்தில் கண்டு கொள்ளு என்னையே
உந்தன் மனமெத்தனை குணமெத்தனை
வயதெத்தனை துணை எத்தனை சொல்லலையா
அந்த அர்ஜுனனுக்கு பிள்ளையென்று
அர்ச்சனைகள் செய்ய வந்ததென்னையா
அந்த அர்ஜுனனுக்கு பிள்ளையென்று
அர்ச்சனைகள் செய்ய வந்ததென்னையா
தர்மம் திருமுகம் தான்
தாரார் கருங்குயிலே
கூடி மறுவிடுங்கள்
தேவியாயிரும் தேவனுமாய்