Thottathu Poovai |
---|
ஆஅஆஅஆஅஆஆஹ்
ஆஅஆஅஆஅஆஆஹ்
ஆஅஆஅஅஹ்ஆஹ்ஹா
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
எந்தன் பார்வையில் உன்னையின்றி
எவரும் இல்லை
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
இந்த வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா
வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா
துல்லிய பூவைப் போல மணம் தரவா
துல்லிய பூவைப் போல மணம் தரவா
உன்னைச் சுற்றி வளைத்து நின்று
துணை தரவாஆ
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பருவம் வளர்ந்த எல்லாம் உனக்கல்லவா
இந்தப் பாவை மனமும் உந்தன் கணக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
உன் எண்ணத்தில் உள்ளதெல்லாம்ஆஅஆ
எனக்கல்லவா
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இவள் இளமைக்கு ஈடு எங்கும்
கேட்டதுண்டாஆ
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை