Thuyar Soozhndha Vaazhvinile |
---|
துயர் சூழ்ந்த வாழ்வில்
அமைதியே நேர்ந்தது தீராத சோகமே
நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா
மன வேதனைதானா வேதனைதானா
மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா
சொல்வீர் பாவியும் நானா
துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது