Thuyil Kondal

Thuyil Kondal Song Lyrics In English


துயில் கொண்டாள்
கலங்காது அமைதி கொண்டாள்
சொந்த மகள் இந்த மகள்
என்பதாலோ
ஏங்குகிறாள் கலங்குகிறாள்
அமைதியில்லாமல்
இந்த மகள் வந்த மகள்
என்பதாலோ

சரியாகத் தெரிந்தவனோ ஒருவன்
அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா
இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை
அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை
எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை

ஒருவர் மட்டும்
தியாகம் செய்தால் போதும்
தந்தை உள்ளத்திலே
அமைதி கொஞ்சம் சேரும்
தியாகம் செய்ய
இரும்பு நெஞ்சம் வேண்டும்
அது சிலரிடம்தான்
சில சமயம் தோன்றும்


உண்மையினை
நீ அறிவாய் தாயே
இருந்தும் ஒரு குறையும்
வைக்கவில்லை நீயே
கண்மணிபோல் காத்து வளர்த்தாயே
உனைக் கடந்து செல்லத்
துணிந்து விட்டேன் தாயே

வந்தாள் இருந்தாள்
வந்தவள்தான் பிரிகின்றாள்
தந்தையே உங்கள் தங்கமனம்
அமைதி கொள்க