Thuyil Kondal |
---|
துயில் கொண்டாள்
கலங்காது அமைதி கொண்டாள்
சொந்த மகள் இந்த மகள்
என்பதாலோ
ஏங்குகிறாள் கலங்குகிறாள்
அமைதியில்லாமல்
இந்த மகள் வந்த மகள்
என்பதாலோ
சரியாகத் தெரிந்தவனோ ஒருவன்
அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா
இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை
அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை
எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை
ஒருவர் மட்டும்
தியாகம் செய்தால் போதும்
தந்தை உள்ளத்திலே
அமைதி கொஞ்சம் சேரும்
தியாகம் செய்ய
இரும்பு நெஞ்சம் வேண்டும்
அது சிலரிடம்தான்
சில சமயம் தோன்றும்
உண்மையினை
நீ அறிவாய் தாயே
இருந்தும் ஒரு குறையும்
வைக்கவில்லை நீயே
கண்மணிபோல் காத்து வளர்த்தாயே
உனைக் கடந்து செல்லத்
துணிந்து விட்டேன் தாயே
வந்தாள் இருந்தாள்
வந்தவள்தான் பிரிகின்றாள்
தந்தையே உங்கள் தங்கமனம்
அமைதி கொள்க