Udakkachatham

Udakkachatham Song Lyrics In English


உடுக்க சத்தம் கேட்ட தாயி
ஓடி வந்து நில்லு நில்லு

தடுத்து நிக்கும் வேலி எல்லாம்
தகர்க்க அருள் வாக்குச் சொல்லு

வானம் தொட்டு பூமி எங்கும்
வாழும் சக்தி மாரியம்மா

மானம் மரியாதைகளை
காத்து நிக்க வாடியம்மா

நாளும் உன்ன பூஜை செய்ய
நல்ல பதில் தாருமம்மா

நெனச்ச போது அணைக்க வேணும்
தவிச்ச தாகம் தணிக்க வேணும்
படைச்ச தாயி மனசு வந்து
எறங்கி நீயும் வழங்க வேணும்

தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்
முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு
அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு
தாய மதிப்போம் தாய் பேர துதிப்போம்
தங்கத் தாய் புகழ பாடும் இந்தப் பாட்டு
இந்த சேய் படிக்கத் தீவினைய ஓட்டு
சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி
என் தாயே சரணம் அருள் காட்டு
சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி
என் தாயே சரணம் அருள் காட்டு

தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்
முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு
அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு

ஆச வெச்ச பாவத்துக்கு
ஆடுகிறேன் பம்பரமா
பாசம் வெச்ச பாரத்துக்கு பாடு பட்டேன் எந்திரமா
ஒம் மேல சாட்சி வெச்சு ஒண்ணான ஜோடி
ஊராரு கண்ணு பட்டு ரெண்டானது
பொன்னான நெஞ்சுக்குள்ளே உண்டான மோகம்
பொல்லாங்கு சொல்லும் பழி என்றானது
ஒண்ணா ரெண்டா சுமை தாங்கணுமா
உள்ளம் ரெண்டும் இன்னும் ஏங்கணுமா
கண்ணால் கண்டும் மௌனம் ஏண்டியம்மா
முன்னால் வந்தால் இன்னல் தீருமம்மா
அடி ஆதி முதல் அந்தம் கண்ட மாரி
பல நீதி சொல்லி வாழ வைக்கும் தேவி

தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம்
முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு
அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு

ஏழைக்கும் பாழைக்கும்
இன்றைக்கும் என்றைக்கும்
காவல் நிற்கும் மாரி


கருமாரி

வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு
பார் என்று சாட்சி சொல்லும் தேவி

அலங்காரி

ஏழைக்கும் பாழைக்கும்
இன்றைக்கும் என்றைக்கும்
காவல் நிற்கும் மாரி

கருமாரி

வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு
பார் என்று சாட்சி சொல்லும் தேவி

அலங்காரி

அன்புக்கு அன்பு சொல்லும் காளி நீ
துன்பத்த வெல்ல வரும் சூலி நீ
தாய் எந்தன் முத்து மாரி
நியாயங்கள் சொல்லும் தேவி

தாய் எந்தன் முத்து மாரி
நியாயங்கள் சொல்லும் தேவி