Ulagam Oru Kavithai |
---|
உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன் ஓ
உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன்
எல்லாம் உண்டு ஒன்றுமில்லை இதிலே
உலகம் ஒரு கவிதை
மதுவில் இதைக் கொண்டேன்
இது நாள் வரையில் நானே நடந்தேன்
அது இன்று நடை போடுதே
இரவா பகலா இவள் யார் அவளா
மது உன்னை எடை போடுவேன்
இரண்டே மனிதன் புதியவன் இங்கே
பழையவன் எங்கே காணவில்லை ஒமஞ்சு
போதையுண்டு புத்தியில்லை இதிலே
உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
கண்டால் கூட இன்பமுண்டு அதிலே
உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
ஆற்றில் கிடைத்தால் மீனும் மணக்கும்
அது ஒரு புகழ் அல்லவா
சேற்றில் கிடைத்தால் தேனும் கசக்கும்
அது ஒரு இழிவல்லவா
இருந்தால் இருப்போம் உள்ளது போதும்
இதுபோல் வரவு தேவையில்லை
உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டேன்
உன்னை நினைத்தால் உலகம் சிறிது
இனி ஒரு மது வேண்டுமா
உன்னை நினைத்தால் பசியா பெரிது
இனி ஒரு பணம் வேண்டுமா
இருவர் : இருந்தால் இருப்போம் உள்ளது போதும்
இதுபோல் வரவு தேவையில்லை
இருவர் : உலகம் ஒரு கவிதை
உறவில் அதைக் கண்டோம்
கண்டால் கூட இன்பமுண்டு அதிலே
உலகம் ஒரு கவிதை