Ulagam Oru Naal Pirandhathu |
---|
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
மொழியே விழியால் நடந்தது
மொழியே விழியால் நடந்தது
அதில் அழகும் சுகமும் இருந்தது
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
மேகங்கள் சொல்லும் சொல்லை
கேட்டது இல்லையோ
மேகங்கள் சொல்லும் சொல்லை
கேட்டது இல்லையோ
அன்பு வேதங்கள் பாடிடும்
தென்றல் இல்லையோ
காகமும் கிளியும் பேசவில்லையோ
கண்மணி பார்வையே பாஷைத்தான் இல்லையோ
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
கோவிலில் தெய்வம் உண்டு
வார்த்தை இல்லையே
கோவிலில் தெய்வம் உண்டு
வார்த்தை இல்லையே
மணி ஓசைப் போல் ஒரு
பாஷை இல்லையே
ஆயிரம் வார்த்தையில் அன்பு இல்லையே
அன்னமே தெய்வமே மௌனமே முல்லையே
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
பால்வண்ணம் பச்சைக்கிளி
முத்து நகையே
தமிழ்ப்பாடல்கள் தேடிடும்
வட்ட விழியே
மோகன ராகத்தில் தொணித்த முகமே
மூவரும் தேவரும் உன்னுடன் சமமே
உலகம் ஒரு நாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது
மொழியே விழியால் நடந்தது
அதில் அழகும் சுகமும் இருந்தது
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்