Ulagathil Sirandhadhu |
---|
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது
எது ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
அனுபவமாவது அது
வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் காண
துடிப்பது அது வட்டி
கொடுப்போரும் வாங்கி
முடிப்போரும் காண
துடிப்பது அது
சிலர் எட்டி
உதைத்தாலும் கட்டி
அடித்தாலும் இதயத்தில்
இருப்பது அது இதயத்தில்
இருப்பது அது
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு
வீட்டிலும் அனுபவமாவது அது
அனுபவமாவது அது
அறிவையும்
கெடுப்பது அழகினில்
பிறப்பது அகிலத்தின்
பெருங்கதை அது
அறிவையும் கெடுப்பது
அழகினில் பிறப்பது
அகிலத்தின் பெருங்கதை
அது
அன்று ஆதாம்
ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
ஆனந்த மாளிகை அது
உலகத்தில் சிறந்தது
காதல் உலகத்தில் சிறந்தது
காதல் அந்த காதல்
இல்லையேல் சாதல்
உலகத்தில் சிறந்தது
காதல்
வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் மறக்க
முடியாதது வட்டி கொடுப்போரும்
வாங்கி முடிப்போரும் மறக்க
முடியாதது
காதல் கட்டி
அணைப்போரும் கலந்து
மிதப்போரும் கடக்க
முடியாதது கடக்க
முடியாதது
உலகத்தில் சிறந்தது
எது ஓர் உருவமில்லாதது
எது ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
அனுபவமாவது அது
உள்ளே உயிர்
வளர்த்து உதிரத்தால் பால்
கொடுத்து அள்ளி
இடும்போதெல்லாம்
அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லியிடும்
தேவதையின் கோவில் அது
பண்பு தெரியாத
மிருகம் பிறந்தாலும் பால்
தரும் கருணை அது சிலர்
பசித்த முகம் பார்த்து பதறும்
நிலை பார்த்து பழம் தரும்
சோலை அது
இருக்கும் பிடி
சோறு தனக்கென்று
எண்ணாமல் கொடுக்கின்ற
கோவில் அது இருக்கும் பிடி
சோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது
தினம் துடிக்கும்
உயிர் கண்டு தோளில்
இடம் தந்து அணைக்கின்ற
தெய்வம் அது
அது தூய்மை
அது நேர்மை அது
வாய்மை அதன் பேர்
தாய்மை
உலகத்தில்
சிறந்தது தாய்மை
அதை ஒப்பு கொள்வதை
நேர்மை உலகத்தில்
சிறந்தது தாய்மை
ஆண் & உலகத்தில்
சிறந்தது தாய்மை உலகத்தில்
சிறந்தது தாய்மை