Ulagathile Oruvanena

Ulagathile Oruvanena Song Lyrics In English


என்றும் புதிதாக இளமை குறையாமல்
தென்றல் போல் காவிரி போல் தென்னந்தமிழே போல்
அன்பு மனையாளும் ஆணை தலை மகனும்
நின்று நிலைத்து நீடூழி வாழியவே
நீடூழி வாழியவே

உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே

வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
வள்ளுவனும் வாசுகியும்
வாழ்ந்து வந்ததும் அந்நாளே
மறு பிறப்பில் அவர் போல் வந்து
அறம் வளர்ப்பதும் இந்நாளே

ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
ஜானகிக்கும் ராமனுக்கும்
சரிதம் கண்டது இந்நாளே
அந்த சரித்திரத்தில் உங்களுக்கும்
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு
கிடைக்கும் ஒரு பொன்னேடு

இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்

என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு
என் தேவன் தந்ததிந்த நிறைவு
அந்த தெய்வத்துக்கும் இந்த தேவனுக்கும்
எந்தன் கண்ணும் நெஞ்சும் என்றும் அடிமை

இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்
எனக்கொரு உலகம் காட்டினான்
இறைவன் என்னை படைத்தான்
வாழ்வும் கொடுத்தான்

வசனம்

வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருபதை தாண்டியதல்ல

அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு
அம்மாடி இது என்ன உடம்பு
அந்த நாள் ஆண்டவன் படைப்பு


விடவில்லை வாலிப துடிப்பு

விளையாட ஆயிரம் நினைப்பு

விடவில்லை வாலிப துடிப்பு
விளையாட ஆயிரம் நினைப்பு

தவிக்குது தனிமை தேடி

அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி

தவிக்குது தனிமை தேடி
அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி

வருஷம் போனால் என்ன
நல்ல வயசும் ஆனால் என்ன
உருவத்தை பாரடி மெல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல
முகம் இருப்பதை தாண்டியதல்ல

கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை
காஞ்சன மாலை பொன்னூஞ்சல் ஆடினாள்
பொற்பதவள்ளி பொற்பதவள்ளி
லாலி சுப லாலி லாலி சுப லாலி