Ulagile Athisayam |
---|
உலகிலே அதிசயம் படைத்தேன்
ஓ சிற்ப சுந்தரி
ஹாஹ ஹாஹ
உயிரையே தந்திட அழைத்தேன்
ஓ மௌன மஞ்சரி
ஹாஹ ஹாஹ
நானோ பாதி நீயா
நீயே பாதி நானா
கனவே நிஜமோ தவிப்பே விழிப்போ
பிறப்பே வரமோ யுகமே நொடியோ ஹோ
ஓஹோ ஹோஓஹோ ஹோ
ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
அழகியே அழகியே இது நிஜமா
அகிலமே அறிந்திட அனுபவமா
உன்னை நினைத்தேன் உயிரில் தவித்தேன்
எனக்குள் ஜொலித்தேன் உனை காதலித்தேன்
காதல் நம் காதல் காதல் நம் காதல்
தனிமையில் தழுவினாய் சிலை ஆனேன்
உயிரென படைத்ததே முதற் காதல்
எவரிடம் கேட்டாய் மனிதா மனிதா
செதுக்கினாய் பெண்ணாய் சிலையை சிலையை
ஜெகத்தின் அதிபதி எனை நீ மறந்து
படைத்திட முனைந்தாய் தெரிந்தே தெரிந்தே
செய்தாயே ஒரு பாவம்
எவர் தந்தார் இந்த தைரியம்
சிலையாக வடித்தாயே என்னை
சிறகாக முளைத்ததே காதல்
விழியாலே வலை வீசும் போது
ஒளிராத உள்ளங்கள் ஏது
என் காதல் நீ தந்ததன்றோ
உன் பார்வையில் பேதம் ஏன் தெய்வமே
ஓ மானிடனே என் படைப்பு இது
ஓ ரட்சகனே என் கனவு இது
ஆதியும் நான் என அந்தமும் நான் என
அறியா மூடனனா நீ
ஆதியும் அந்தமும் நீ எனச் சொன்னவன்
மானிடன் நான் அல்லவோ
படைப்பவன் வேலை நன்கிதை அறிந்தும்
தவறு புரிந்தாய் பொறுப்பினை மறந்தாய்
ஓ மானிடனே இதுவே எச்சரிக்கை
ஐ வான் யூ
ஆஆஆஓஓஓஆஆஆ
ஆஆஆஓஓஓஆஆஆ
ஆசையின் பாசமே நீ தான்
ஓ பேசும் வானமா
ஹாஹ ஹாஹ
இதயத்தின் வாசலே நீ தான்
ஓ பெண்மை பேசுமா ஹாஹ ஹாஹ
பெண்மை வாழ நித்தியம்
காதல் தானே சத்தியம்
உடலும் உயிரும் ஒன்றாய் இணையும்
இரவும் பகலும் எங்கோ அலையும் ஹோ
ஓஹோ ஹோஓஹோ ஹோ
ஜனனமும் மரணமும் இல்லை
ஓ காதல் சரித்திரம்
பாலமோ தூரமோ இல்லை
உன் காதல் நிரந்தரம்
பேசும் காதல் நித்தியம்
பெண்மை செய்யும் சத்தியம்
மனசும் மனசும் கலந்தால் சொர்கம்
மலரும் மலரும் மலரும் ஓஹோ