Ullangal Palavitham |
|---|
உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்
உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
இருவர் : உள்ளங்கள் பலவிதம்
கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
நதிவழி போவது போல் மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்
இருவர் : உள்ளங்கள் பலவிதம்
மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
அனைவரும் : உள்ளங்கள் பலவிதம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ (3)
