Ullaththil |
---|
ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹாசலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்
ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹாசலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்
இளம் பாவை கொடுத்த மனது
எனக்கென்று அடித்த கனவு
இளங்காற்றில் இணைந்து கலந்துதான்
போனதோ
இசை பாடி திரிந்த குயிலும்
விளையாடி களித்த மயிலும்
பிரிவென்ற இடத்தை நினைத்துதான்
சேர்ந்ததோ
வீசும் காற்றில் துன்பம்
வேகும் நெஞ்சில் துன்பம்
எங்கோ எங்கெங்கோ
இன்பமே
பெண் உள்ளம் ஒரு நெருப்பு
பெருகுதடி வெறுப்பு
இளமை எனும் களிப்பு
உன் இதழில் வந்த சிரிப்பு
தந்தனதந்தனனா
லாலலலாலா
நெருக்கத்தில் இனித்த இனிப்பும்
விருப்பத்தில் அணைத்த அணைப்பும்
வெறுப்பினில் அனைத்தும் மறந்துதான்
போகுமோ
விரல் தொட்டு பிடித்த பிடிப்பும்
மனம் தொட்டு துடித்த துடிப்பும்
விரைவினில் நடித்த நடிப்பென
ஆகுமோ
வெள்ளை பூவில் கள்ளம்
சொல்லி பார்க்கும் உள்ளம்
உண்மை என்னென்பேன்
பெண்மையே
தெரிந்ததடி உன் நெஞ்சம்
தேவை இல்லை பொன் மஞ்சம்
மனதுகளில் ஏன் வஞ்சம்
மதுவின் வசம் என் நெஞ்சம்
ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹாசலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்
சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்