Un Iru Kangal |
---|
என் வாழ்கையில எனக்கு
ஒரே ஒரு ஆசைதான்
எப்போமே உன்ன பாத்துட்டே இருக்கனும்
ஒன்ன உன் கண்ண
அனா அதா விட சந்தோசமா இருக்கு
நீ என்ன தேடுறப்போ
நான் உன்ன பாக்குறது
உன் இரு கண்கள்
என் முகம் தேடும்
நொடிகள் தோறும்
உயிர் இடம் மாறும்
மாறும் மாறும்
உன் இரு கண்கள்
என் முகம் தேடும்
நொடிகள் தோறும்
உயிர் இடம் மாறும்
மழை பெய்யும் நேரம்
முன்னேற்றி ஓரம்
உள் மூச்சு தீண்டும்
உறைந்திடும் தேகம்
உன் மூச்சு ஈரம் பட்டு
மழை நனையும்
ஒரு துளி இறங்கிடும்
உயிரின் உள்ளே
இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன்
சிறு கடலலை மேலொரு
மழையை போலவே
உன்னை கண்டு திரிந்திருப்பேன்
அட ஒரு துளி இறங்கிடும்
உயிரின் உள்ளே
இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன்
சிறு கடலலை மேலொரு
மழையை போலவே
உன்னை கண்டு திரிந்திருப்பேன்
ஆஹாமுள்ளின் மேலே
பட்டாம்பூச்சி போல்
நீ எந்தன் வாழ்விலே
உன்னை இன்றி வேறெந்த பெண்ணை
நினைப்பேனோ நெஞ்சிலே
வெயிலும் மழையுமே
சேர்ந்து சிதறுதே
உன்னை அணைத்தாலே
பிழையின் திருத்தங்கள் தேவையில்லையே
அன்பை கோர்த்தாலே
நீ கண் மூடியே
இதழ் தேடிடும்
நொடியே நொடியேதான்
அட உள் நகரும் என் மென் உணர்வுகள்
மெழுகாய் மெழுகாய்தான்
நான் உருகினேன்
உயிர் கலைகிறேன்
தீ போலே அழைந்தேனே
ஆஅஆஅஆ
இருவர் : நிழல் குடை போல் ஒரு
மனதும் ஏனோ இங்கு
வெயில் துளி சேகரிக்கும்
இரு விரல் இடை கசிந்திடும்
ஏக்கம் ஏனோ இனி
இதயத்தில் எதிரொலிக்கும்
ஆஅஆஆஆஅ
இருவர் : நிழல் குடை போல் ஒரு
மனதும் ஏனோ இங்கு
வெயில் துளி சேகரிக்கும்
இரு விரல் இடை கசிந்திடும்
ஏக்கம் ஏனோ இனி
இதயத்தில் எதிரொலிக்கும்