Un Kannai Partha Piragu

Un Kannai Partha Piragu Song Lyrics In English


உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்

நீ வந்து போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில்
தெரியுது என் பாதம்

தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்

உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்

அடி உன்னை போல
பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை
யாருமே ஈர்த்ததில்லை
ஓ ஓஹ் ஓ

உன் உதடு எந்தன் பேரை
சொல்லும் நேரம்
சிலிர்கிறேன் தவிகிறேன்
என்வசம் நானும் இல்லை
ஓ ஓஹ் ஓ

மழை நின்ற போதும் கிளைகள்
சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்

உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்



என்னை விட்டு உள்ளம்
உந்தன் பின்னல் செல்லும்
தடுக்கிறேன் தவிர்கிறேன்
இதயமும் கேட்கவில்லை
ஓ ஓஹ் ஓஆ ஹ் ஹா


நான் இன்று போல என்றும்
சொக்கிபோனதில்லை
இதற்குமுன் எனக்கு இந்த
பரவசம் பாய்ந்ததில்லை
ஓ ஓஹ் ஓ

நீ நேற்று எங்கு இருந்தாய்
என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்

உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்

நீ வந்து போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும்
திசையில் தெரியுது என் பாதம்

தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்

ஆஆஆஅஆஅ
ஆஆஆஅஆஅ
ஏஏஹிஏஆஅ

உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில்
மனம் குடை சாயும்