Un Kannil Neer |
---|
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி
உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
கால சுமைதாங்கி
போலே மார்பில் எனை
தாங்கி வீழும் கண்ணீர்
துடைப்பாய் அதில் என்
இன்னல் தணியுமடி
ஆழம் விழுதுகள்
போல் உறவு ஆயிரம்
வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து
விடாதிருந்தேன்
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
முள்ளில்
படுக்கையிட்டு இமையை
மூடவிடாதிருக்கும் பிள்ளை
குலமடியோ என்ன பேதமை
செய்ததடி
பேருக்கு பிள்ளை
உண்டு பேசும் பேச்சுக்கு
சொந்தமுண்டு
என் தேவையை யார்
அறிவார்
உன்னை போல் தெய்வம்
ஒன்றே அறியும்
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில்