Un Parvai

Un Parvai Song Lyrics In English


உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்

இரவெல்லாம் நெஞ்சில்
சின்ன சின்ன அவஸ்த்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே

உயிர் நாளும் கொஞ்சம்
விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு செய்தாயே

நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் வந்தால் சௌக்கியமே
ஹே ஏஹேஅன்பே

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்


சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்

உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை
சன்சீனாவும் கண்டதில்லை
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்

மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
ஹேஏஹேஅன்பே

உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்