Un Vizhiyil |
---|
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா
யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம் சகியே
காதல் என்பது
என்னையும் காவு
கொண்டதே இப்படி
வழி தாங்கவா
உயிர் வாங்கவா
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
காகிதத்திலே கப்பல்
செய்வதை பார்த்திருக்கிறேனே
நீ கண்களால் என்னை மூழ்க
செய்வதை காதல் என்கிறேனே
யாரிடத்திலும்
உன்னை பற்றியே
பேசி நிற்கிறேனே நீ
பேசு என்றதும்
வார்த்தை இன்றி நான்
தத்தளிக்கிறேனே
காலங்கள் மாறும்
என்று முன்னாலே சொல்வேனே
நீயே என் காலம் என்றால்
மாறாதென்பேனே
ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
கால் நடந்திட
வீடு வந்திடும் முன்பு
நம்பினேனே உன் காலில்
உள்ளதே எந்தன் வீடென
இன்று சொல்கிறேனே
தாய் இடத்திலே
உண்டு அன்பென முன்பு
நம்பினேனே உன் காதல்
பார்வையில் நீயும் தாயென
வாதம் செய்கிறேனே
பேர் அலைகள்
வந்தால் கூட ஆடாமல்
நிற்பேனே அன்பே உன்
கண்கள் பட்டு ஆடி போனேனே
ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா
யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம்
சகியே சகியே
காதல் என்பது
ஆண் & என்னையும்
காவு கொண்டதே
ஆண் & இப்படி
வழி தாங்கவா
ஆண் & உயிர் வாங்கவா