Unakedhu Sondham |
---|
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
பாப கணக்குகளைப்
பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த
பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி
அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும்
அவர்களுக்குத் தம்பியடா
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு
நீ துணிவிருந்தா கூறு
ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு
அவரு எங்கே போனார் பாரு
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்ததெத்தனை எறந்ததெத்தனை
வம்பிலே மாட்டிப் போனதெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
முடிஞ்சுதடி சொந்தம்
எத்தனை எத்தனை ஆனந்தம்
அடியே முத்து கண்ணு இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம் ஆனந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா