Unakkagave Naan Uyir Vaazhthene |
---|
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
விண்மதி வானில் முகில் சேர்ந்தாலும்
என் மன வானில் இருள் சூழ்ந்தாலும்
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
பிரிவினில் காணும் இன்பத்தைப் போல
பேரின்பம் ஏதுண்டோஓஒ
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
உனது தியானமே நானே மறவேன்
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
இதயமே உன்னை இணைந்து சென்றாலும்
இன்பக் கனவிலே மறைந்து விட்டாலும்
இணையேதுமில்லா பிரேமையினாலே
இதுதான் புவி மேலே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
மன மாளிகையில் மகிழும் தேவியே
உலகமே யாவும் ஒன்றாயினும்
என் உடலும் உயிரும் நீயேஏ
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே