Unakku Naan Paadum |
---|
பாடலாசிரியர் : பிறைசூடன்
உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஓ இதுதான் பாச தீபம்
உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்
பாலுக்காக நானும் ஏங்கி தவிக்கும் போதிலே அமுதம் ஊட்டி நீயும் காத்தாய் தாயை போலவே
உருகுதே உள்ளம் உன்னாலே பெருகுதே கண்ணீர் தன்னாலே நான் வாழ நீயும் வேண்டும் வருவாயோ வாழ்வில் மீண்டும்
உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்
மரத்தை போல நிழலை தந்து மறைந்த தெய்வமே விழுது ஒன்று உன்னை எண்ணி வாடும் காலமே
மழைத்துளி இல்லா குளம் போலே மர நிழல் இல்லா வனம் போலே துயராலே ஊஞ்சல் ஆடி துடிக்கின்றேன் நாளும் வாடி
உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்