Unakkum Enakkum |
---|
உனக்கும் எனக்கும்
என்னென்ன கனவுகள்
அது நடக்கும் வரைக்கும்
என்னென்ன உணர்வுகள்
இங்கு ஏழை
காணும் கனவு
அது நூற்றில் ஒன்று
நடக்கும்
அதை நம்பி நம்பி தானே
நம் நாட்கள் இங்கு போகும்
கடந்து போகும் வழிகள்
பல புதிர்கள் சொல்லும்
அது கொடுக்கும் பாடம் உன்னை
வழி நடத்தி செல்லும்
கனவே கனவே
எல்லோர்க்கும் அன்னை நீ
அன்பால் அனைக்கும்
அழகான கன்னி நீ
குழந்தை போல மனதை
நாம் பாதுகாக்க வேண்டும்
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்
ஊர் போற்றி புகழ வேண்டும்
உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்
கையில் எடுத்ததெல்லாம்
நாம் முடிக்க வேண்டும்
குழந்தை போல மனதை
நாம் பாதுகாக்க வேண்டும்
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்
ஊர் போற்றி புகழ வேண்டும்
உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்
கையில் எடுத்ததெல்லாம்
நாம் முடிக்க வேண்டும்
மனதால் மதியால்
நீ செல்வ மகளடி
குணத்தால் உணர்வால்
என்றும் உயர்ந்த பெண்ணடி