Unavey Marundhu

Unavey Marundhu Song Lyrics In English




உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக மறந்தோமே
மருந்தே நம் விருந்து

இலையோடு
சுடு சோறு படும்போது
நார் சத்து செயற்கை
இலை போட்டு நஞ்சாக்கினோம்

கொதிக்காத
காய் தின்று கிளி பூனை
தெம்பாச்சு அறியாமல்
அறிவை நாம் ஐந்து ஆக்கினோம்

கைக்குத்தல்
அரிசிக்குள் கருவாகும்
ஊட்டம் இயந்திரத்தில்
தீட்டி கரு வறுக்கிறோம்

பாலுக்குள் பதமாக
பயிராகும் புரதம் அதிவேகம்
சூடேற்றி அதை அழிக்கிறோம்

உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக
மறந்தோமே மருந்தே
நம் விருந்து மருந்தே
நம் விருந்து

பழங்காலம்
முதலாக இலைப்போட்டு
நாமும் பலகாரம் வைத்தோமே
அதில் அர்த்தம் உண்டு

நெய்யும் பருப்பும்
முதலாக உள் சென்று உணவுக்
குழாய்வரை தன்மையாக்கும்

ருசிக்காக உண்டவை
செறிக்காத மற்றவை இரசம்
ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும்


கருணைக்கிழங்காலே
கொழுப்பை கரைக்கிறோம்
சாப்பிட்ட சூட்டையே
மோரிட்டு அணைக்கிறோம்

பாட்டிக்குத்
தெரிந்தது எந்நாளும்
உயர்ந்ததே ஆராய்ந்து
பார்க்க நம் விஞ்ஞானம்
மறந்ததே

உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக
மறந்தோமே மருந்தே
நம் விருந்து விருந்து



பாயாசம்
இனிப்புக்கு பாகற்காய்
கசப்புக்கு புளிசாதம்
புளிப்புக்கு வாழைப்பூ
துவா்ப்புக்கு

ஊறுகாய்
நாவிலே காரமாய்
சிட்டிகை உப்புதான்
ஓரமாய் அறுசுவையும்
நன்மையும் கொண்டாடி
வாழ்ந்தவர் ஒரு சுவையும்
இல்லாத உணவுக்கு தாவினோம்

இயந்திர
குட்டிகள் இயன்றிடும்
பொட்டலம் நம் சவப்பெட்டிகள்
என்பதைக் கூறுவோம்

அக்கரை சேர்த்து
தான் உணவிடும் தாய்
மனம் நாமுமே நம் உடல்
அப்படி பேணுவோம்ஓஹோ

உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து விருந்து விருந்து
விருந்து விருந்து