Ungalil Nam Annaavai Paarkiren

Ungalil Nam Annaavai Paarkiren Song Lyrics In English


உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே

கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது

அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

செல்வம் இன்று வந்து நாளை போவது


செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

ஏழை கதை மேடையிலே சொல்லுவார்

அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா

அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்