Unmai Orunaal Vellum |
---|
உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே
ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான் நீயோ
அழவில்லை உனக்கோ
அழிவில்லை
சிரித்து வரும்
சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள்
உண்டு உரையாடி உயிர்
குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை
போர்த்திவிட்டு உன்னாடை
அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில்
ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி
விட முடியாது
உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே
சுட்டாலும்
சங்கு நிறம் எப்போதும்
வெள்ளையடா மேன் மக்கள்
எந்நாளும் மேன் மக்கள் தானே
கெட்டாலும்
நம் தலைவன் இப்போதும்
ராஜன் அடா வீழ்ந்தாலும்
வள்ளல் கரம் வீழாது தானே
பொன்னோடு
மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை
கொள்ளையிட முடியாது
உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே