Unmaiikke Pirappeduthaen

Unmaiikke Pirappeduthaen Song Lyrics In English


உண்மைக்கே பிறப்பெடுத்தேன்
உண்மைக்கே வாழ்ந்திருந்தேன்
உண்மை சொல்லி அரசிழந்தேன்
உண்மையினால் தெருவில் வந்தேன்
ஏ ஏ ஏ ஏ ஏ தெருவில் வந்தேன்

சத்திய சோதனை எத்தனையாயினும்
சகிப்பவன் தானே சத்தியவான்
சத்திய சோதனை எத்தனையாயினும்
சகிப்பவன் தானே சத்தியவான்
பட்ட கடன்களை எப்படியாவது
கொடுப்பவன் தானே புண்ணியவான்
கொண்டதை எல்லாம் கொடுத்து விட்டேன்
இனி கொடுப்பதற்கோர் சல்லி கையில் இல்லை
இல்லை என்றால் அவன் விடுவானா
கடன் பட்டவன் கண்ணீர் வெளியாமோ

கருணை உள்ளோரே பெரியவரே
நான் கட்டிய மனைவியை விற்க வந்தேன்
சத்திய சோதனை எத்தனையாயினும்
சகிப்பவன் தானே சத்தியவான்

ஐயா
நான் தொட்டுத் தாலி கட்டிய
என் மனைவியாகப்பட்ட சந்திரமதியை
என் துன்பத்தின் நிமித்தம் தங்கள் முன்
விலை கூறி விற்கிறேன் ஐயா (வசனம்)

என்னப்பா விந்தை இது
அட என்னப்பா விந்தை இது
மனைவியையே விற்க்கின்றாயே
பாவமென பணம் கொடுத்து நான் வாங்குவதால்
நன்மை என்ன நன்மை என்ன

காலை எழுந்திருந்து
மாடு மனை சுத்தம் செய்வாள்
வாசலில் நீர்த் தெளித்து மாக்கோலம் போட்டிடுவாள்
தண்ணீர் எடுத்து வைப்பாள் தோட்டம் திருத்தி வைப்பாள்
அறு சுவையும் சமைத்து வைப்பாள்
அன்னை என காவல் நிற்பாள்
நல்ல வேலைக்காரருக்கு என்ன என்ன பணிகளென்று
சாத்திரங்கள் சொன்ன படி நாள் முழுதும் பணி புரிவாள்


இதனுள்ளே வேண்டிய பொன்
இருக்கிறது எடுத்துக் கொள்வாய்
இப்பொழுதே அடிமை தனை
என்னுடன் அனுப்பி வைப்பாய்

என் அன்புக்குரிய மனைவியே
என் அருமைக் குழந்தையே
உங்களை எல்லாம் நான்
விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டது

சென்று வா என் உத்தமியே சென்று வா
சென்று வா என் உத்தமியே சென்று வா
வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்
வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்
உன்னை இங்கு விற்றேனே சென்று வா

மைந்தா நான் பெற்ற குல விளக்கே
மார் மீதும் மடி மீதும்
சீரோடும் சிறப்போடும்
வாழ்ந்ததெல்லாம் நினைக்காமல்
மனம் கலங்கிப் போகாமல்
அன்னை அருகிருந்து அவள் பணிக்கு உதவிடுவாய்
சென்று வாசென்று வாசென்று வா

கலங்காதே மன்னா
கை பிடித்த நாயகரே
கலங்காதே மன்னா
கை பிடித்த நாயகரே
கணவன் வார்த்தையினை
காப்பவள் தான் பெண்ணரசி போய் வாரேன்
உங்கள் புகழனைத்தும் காத்திருப்பேன்
விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ
விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ
விதியினை யார் வெல்வாரோ விதியினை யார் வெல்வாரோ