Unnaal Vilainthadhadaa |
---|
சீரோடு படர்ந்திருந்த
சிங்காரப் பூங்கொடியை
வேரோடு பெயர்த்தெடுத்து
வெண் தணலில் வீழ்த்தி விட்டாய்
ஊரோடு வாழ்ந்திருந்த
உடன் பிறப்பை அனுப்பி வைத்து
இளமை போராடும் மனதோடு
பொன் மகளை தாழ்த்தி விட்டாய்
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா
பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
அவள் புத்துயிர் பெற்றிட முடியுமா
பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
கண்ணால் விடும் நீரை
நிறுத்தும் கடமை உனக்குத் தான் தெரியுமா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா
மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
கோவிலைக் கட்டி முடித்தும்
குடமுழுக்கு நடைபெறவில்லை
வயிற்றுக்குத் தேவை உணவு
மனத்துக்குத் தேவை உணர்வு
அந்த உணர்வுக்குக் கணவன் தேவை
அந்தக் கணவனை இழந்தவள் விதவை
இது உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா