Unnai Kaana |
---|
உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க
உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முந்நூறு
எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு
மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்
அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்
கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்
பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ
உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்
வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்
ரோஜா மொட்டு பூவானது
இப்போதுதான் ஆளானது
தேகம் எங்கும் ஈரம்
தேனே கொஞ்சம் திரும்பு
கோழி கூவும் நேரம்
போதும் போதும் குறும்பு
இந்த வேளை இன்ப லீலை
இடைவேளை கூடாதடி
உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க
உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்