Unnai Kodu Ennai Tharuven

Unnai Kodu Ennai Tharuven Song Lyrics In English




உன்னை கொடு
என்னை தருவேன் இதுதான்
காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும்
காதலடி

தாலாட்டை கேட்காத
ஒரு ஜீவன் நானம்மா தாயாகி
நான் பாட சேயாகி கேளம்மா
தாளம் பூவே என் தோள்
சாயம்மா

என்னை தந்து
உன்னை பெறுவேன்
காதல் இதுதானே
உன்னை தந்து கனவை
பெறுவேன் காதல் இது
தானே



உந்தன் பேரை
எந்தன் பேனா எழுதும்
போது வலிக்காமல்
அன்பே நான் எழுதுவேன்

உயிரே உந்தன்
கண்கள் காணும் கனவில்
கூட நான் வந்து தாலாட்டு
பாடுவேன்

என் நிழலை யாரும்
தான் மிதித்து போக விட
மாட்டாய்

என்னை கிள்ள
எனக்கேதான் சம்மதங்கள்
தர மாட்டாய்

மூக்குத்தி நீ குத்தாதடி
என் கண்மணி அந்த வலி கூட
என்னை தாக்குமே

உன்னை கொடு
என்னை தருவேன் காதல்
இது தானே கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் காதல்
இது தானே




வெயில் காலம்
வந்தால் கண்ணின் இமைகள்
ரெண்டை உனக்காக குடையாக
மாற்றுவேன்


காற்றில் தூசும் வந்து
உந்தன் கண்ணில் பட்டால்
பூங்காற்றை நான் கூண்டில்
ஏற்றுவேன்

எந்தன் வீட்டு
தோட்டத்தில் நடந்து
வந்தா பூகம்பம்

பூகம்பத்தின்
பின்னாலும் பூமி
மெல்ல பூ பூக்கும்

கரை ரெண்டுமே
காணாத ஓர் நீரோடை
நான்

அணைக்கும்
அணைக்கட்டு நான்
ஆகிறேன்

உன்னை கொடு
என்னை தருவேன் இதுதான்
காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும்
காதலடி

ஆண் ஒருவன்
தாயான அதிசயத்தை
பார்த்தேனே காதலியை
தாலாட்டும் காதலனை
கண்டேனே

எந்தன் ஆயுள்
ரேகை உன் கையிலே

உன்னை கொடு
என்னை தருவேன்
இதுதான் காதலடி

என்னை தந்து
உன்னை பெறுவேன்
காதல் இது தானே