Unnai Naan Parkkaiyil (Solo) |
---|
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
பொன் மானை பெண் என்று
பொய் சொல்ல வந்தாயோ
விண்மீனை கண் என்று
மை தீட்டிக் கொண்டாயோ
என் கண்மணி வீதியில்
போகும் நேரங்கள்
உன் கால்களில் பொன் மணி
பாடும் ராகங்கள்
நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்
நீயல்லவோ எந்தன் காதல் வரம்
நீ மங்கையா ஆசையின் கங்கையா
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்கு பார்த்தாலும்
அங்கங்கு உன் கோலம்
என்னென்ன கேட்டாலும்
எல்லாமும் உன் நாதம்
ஓராயிரம் ஜென்மமாய்
வாழ்ந்த சொந்தங்கள்
ஓர் பாவையில் வந்ததே
அந்த எண்ணங்கள்
உன் பார்வையில் தானே
நான் பார்க்கிறேன்
உன் வாழ்க்கையில் தானே
நான் வாழ்கிறேன்
என் கண்ணிலும் நெஞ்சிலும்
உன் முகம்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்