Unnai Nambinaar Keduvadhillai |
---|
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
உள்ளத்தில் விளக்கெடுத்து
உறவெனும் நெய்யெடுத்து
அன்பென்னும் கோவிலிலே
அழகாய் ஏற்றி வைத்து
அழகாய் ஏற்றி வைத்து
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
கனியை மரமறியும்
காதலை மனமறியும்
கனியை மரமறியும்
காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ
கன்னியர் நிலை தெரியும்
ஆண்டவனுக்குக்கொரு மனது
ஆண்களுக்கு இரு மனது
தோன்றிய நாள் முதலாய்
துடிப்பதுதான் பெண் மனது
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
தேனாக இனிப்பவனே
தீயாக உருவெடுப்பான்
கண்ணீரில் ஆட வைத்த
காதலை வேண்டுகிறேன்
இன்னும் ஒரு பெண் மனதை
எண்ண வைத்து ஏய்க்காதே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே