Unnai Saranadainthen |
---|
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை
சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிஷம்
இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம்
உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உன்னையே
தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
ச ரி ச ரி க ம
ப ச நி த க ம ப நி ச
ச ரி ச ரி க ம
ப ச நி த க ம ப நி ச
காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வழி நீ வந்தாய்
நான் எழுதும் மேஜையிலே
எரியும் விளக்காய் ஒளிருகிறாய்
ஹ்ம்ம் எனாது விரல் நீ பிடித்து
உயிர் எழுத்தை எழுதுகிறாய்
துணை எழுத்து நீயாக
உறவின் அழகை உயர்த்துகிறாய்
உன் வெள்ளி மனம்
பொன் மஞ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம்
நீ தந்த வரம்
நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கீத சந்திப்பில்
சந்தோஷ தித்திப்பில்
ஒரு பனி மழையென
மடியினில் விழுந்தேன்
ம ம ப நி ச நி த ப
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
தேய்ந்து வரும் வான் மதியாய்
நேற்றுவரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் மலர்கிறேன்
பூவில் விழும் பனித்துளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாங்குகிறேன்
உன் பார்வைகளில்
உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவிதழில்
உன் புன்னகையில்
நான் இடரி விழுந்தேன்
இங்கு உன் வாசம் என்னோடு
என் வாசம் உன்னோடு
கலந்திட சிறகின்றி
காற்றினில் மிதந்தேன்
ம ம ப நி ச நி த ப
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை
சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிஷம்
இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம்
உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உன்னையே
தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா