Unnai Thane Thanjam

Unnai Thane Thanjam Song Lyrics In English


உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இட்டேன் விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்

மலரின் கதவொன்று
திறக்கின்றதா மௌனம்
வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா கட்டி
பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
என்னைத்தானே

உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது


பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே நானே
எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
வந்ததே

என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு

என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே