Unnai Thotta

Unnai Thotta Song Lyrics In English


உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்
தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நினைவா நினைவா

இதுக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இறந்த பொழுது பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

ஹாஆஅ

நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே

புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே


நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா

அலையோடு எரியும் பூக்கள்
கரையோடு வருதல் போல
மீண்டும் நாம் இணைந்தோமா

உன் கள்ள கண்களால்
உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்சின் பள்ளத்தில்
ஏன் காதல் மறைத்தாய்

என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

கைதட்டல்கள் :


பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்

தொண்டைவரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்


காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் செல்லும் என்று
யாருக்கும் தெரிவதில்லை

அகங்கார கன்னி பெண்ணின்
அன்றாட குடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை

ஒரு ஈட்டி எடுத்து
என் நெஞ்சில் செதுக்கு
உன் பேரை சொல்லுமே
அதில் உள்ளே எழுது

என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்
தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நினைவா நினைவா

இதுக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இறந்த பொழுது பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

ஹாஆஅ