Unnai Thotta Kaatru |
---|
ஆஹாஹா ஆஹாஹா
ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஆ ஹா ஹா
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
உன் பாதம் தொட்ட அலைகளே
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது
ஆஹாஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஹா ஆ ஆ
உன் பாதம் தொட்ட அலைகளே
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலம் இட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க
ஆணை இட்டது
அஹஹா ஒஹொஹோ ம்ஹுஹும் லலலா
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது
மழைத் தூறல் போட்டு சாரல் வந்து
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது
என்னை நனைத்தது
ஆஹாஹா ஓஹோஹோ
ஓஹோஹோ ஆஹாஹா
மழைத் தூறல் போட்டு சாரல் வந்து
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது
என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில்
இடம் பிடித்தது
இந்த இயற்கை எல்லாம் இருவரையும்
இணைத்துப் பார்க்குது
அதுவே போதும் என்று பெண்மை இன்று
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னைத் தொட்ட காற்று வந்து
என்னைத் தொட்டது