Unnaivida Maattaen |
---|
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே
முன்பே தானே
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே
முன்பே தானே
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே
அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே
இன்ப காதல் இறக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்கமாட்டாள்
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
பொங்கும் கடலின் ஆழம் தன்னை
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
இங்கு யாரும் காணல் அரிது
மானைப்போலே காணும் மங்கை
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன்
உண்மையில் நானே