Usure Usure |
---|
இசை அமைப்பாளர் : டி இமான்
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ஆஆ ஆஆ
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
குழந்தைய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ
பசியே இல்லனு பலவாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ
புடவ பொட்டுனு எதையும் கேட்காம
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ
குலசாமி தந்திட்ட பூவ
வணங்காமா வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ
நீ தான் தேவ
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
இடி விழுந்தாலும்
சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூ சூடல
விடிஞ்ச பின்னாலும்
ஒரங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல
உன்ன நான் நெஞ்சுக்குள்
அடக்காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா
மனம் தாங்கல
உலகே கண் வைக்கும்
உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும்
இவ ஏங்கல
விதியால செம்பெங்கி மால
வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே
ஏனோ பாவம் போல
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ஆஆ ஆஆ
உசுரே உசுரே