Uttalangkiri Kiri |
---|
உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
அட வா மாமா வா மாமா
உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
கிட்டாத பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
ஆளான பொண்ணுக்கு
நாளான பொண்ணுக்கும்
மாறாது உள்ள மவுசு
தானாக வந்ததோ
வேணான்னு சொல்வது
கூடாது இந்தப் பவுசு
எட்டாத கொம்புல
தேன் கூடு கட்டுது
கிட்டாது எட்டி எடுக்க
இப்போது நிம்மதி
என்னோட உள்ளது
கூடாது தட்டிப் பறிக்க
அப்பாவிப் பொண்ணு இது மாமா
தப்பாக என்ன எண்ணலாமா
இப்போது கிட்ட வந்து வீணா
வித்தாரம் பண்ண எண்ணலாமா
அட வா மாமா வா மாமா
உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா ஹோய்
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
தேடாத சொந்தமும்
கூடாத பந்தமும்
தானாக வந்தது என்ன
காடான நெஞ்சிலே
பூந்தோட்டம் பூத்தது
பூ வாசம் போனதும் என்ன
தானா வெதச்சது
பூவா மொளச்சது
நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது
நாம் என்ன சொல்ல இருக்கு
ஆகாது ஏழைக்கொரு ஆசை
நான் வெறும் கல்லு
என்னத்துக்கு பூச
மாறாது என்னுடைய ஆசை
நீ மறுக்காம
வந்திடணும் பேச
அது வீண் தானே வேணாமே
உட்டாலங்கிரி கிரி மாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
அய் கிட்டாத
பழத்துக்கு வீணே
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே
கன்னிப் பொண்ணு நான்தானே
ஒன்ன எண்ணி ஆளானேன்
ஏழைக்கிது ஆகாது
ஏமாத்துனா தாங்காது
அட வா மாமா வா மாமா
உட்டாலங்கிரி கிரி பாமா
நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா