Uyir Thirandhu |
---|
இசை அமைப்பாளர் : பாலசுப்ரமணியம் ஜி
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கண் தூக்கம் கலைத்தே மெய் இன்பம் விதைத்த அரும்பே உன் வெப்பம் உணர்ந்த நொடியே என் துக்கம் உடைந்த தென்ன கனவில் காணா உணர்வை மனம் நிறைய பொழிந்த மழையே
உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால்
ஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஅ தண்ணீரின் நடுவில் தீவே எந்தன் தோட்டம் நிறைந்த பூவே எனுலகின் விழும்பில் தேடல் மொத்தம் தனித்து காட்டிய தாயே
என் இன்பங்கள் யாவும் உன் கால்கள் நடக்கும் திசையில் மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்
உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால்
வானவில் ஆனாய் என் சோலையில் தேன்மொழி ஆனாய் என் பாலையில் தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்
உயிர் திறந்து விழிக்கிறேன் உனது விழிகளால் மறு பிறவி கொண்டு பிறக்கிறேன் உனது நொடிகளால்