Uyire En Uyire |
---|
உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம்
காட்டாதிரு இரவே என்
இரவே நிலவின்றி உன்
நேரம் கடந்திடு
இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே
என்னை நான்
தெரியாமல் உனக்குள்ளே
தொலைத்தேனே உண்ணாமல்
உறங்காமல் தவித்தேனே நான்
தினம்தோறும்
உன்கூட வெகு தூரம்
நான் போக விரலோடு
விரல் சேர்த்து காப்பேன்னடி
ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்
ஹாஹா
ஹா ஹா (2)
உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே நீ என்னை
இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி
பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா
ஹாஹா
ஹா ஹா (2)
உன் பெயரை தான்
மொழியாக்கினேன் உன்
வாசம் தான் என் சுவாசமே
உன்னோடு தான் நான்
போகவே கடிகாரமாய்
உன்னை சுற்றினேன்
ஒரு பார்வை
பாரேன் ஒரு வார்த்தை
கூறேன் அது போதும்
பெண்ணே உயிரும்
தாரேன்
எழுத்தில்லா
கவியே முள்ளில்லா
மலரே பதில் சொல்லி
போயேன் என் குறிஞ்சி
பூவே
என் நாட்கள்
எல்லாமே உன் நிழலாய்
வாழ்வேனே என் காதல்
முழுவதும் உனக்காக
தான்
கம்பனின் கவிகள்
தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால்
கோர்ப்பேனே நான்
உயிரே என்
உயிரே நினைவில்
அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம்
கடந்திடு
இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே