Vaa Vaa Kanmani

Vaa Vaa Kanmani Song Lyrics In English


வா வா கண்மணி வா வா ஆ கண்மணி
வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

வா வா கண்மணி

தொடங்கியது இசை மழை இங்கே
தொடர்ந்து வந்த பகைவர்கள் எங்கே
முழங்குவது சுதந்திர கீதம்
வழங்குவது சுகம் தரும் நாதம்

சுதிகளின் ஒலியை யார்
சிறைகளில் அடைப்பது

சுரங்களை யார் அவன்
கரங்களில் பிடிப்பது

இசையின் வழி இதயங்கள் கூட
இடையில் சில தடைகளை போட
கடந்து வரும் கலைஞனின் பாட்டு
தடுப்பதெவர் விலங்குகள் போட்டு

ஆயிரம் ரசிகர்கள்
யாவரும் நம் வசம்

ஆனந்த கீதத்தில்
தோன்றிடும் பரவசம்
வாவா வாவா அன்பே

வா வா மன்னவா வாசல் தேடி வா

வா வா கண்மணி வாசல் தேடி வா

இருவர் நெஞ்சில் பல வகை காயம்
இசையில் அவை மறைந்திடும் மாயம்
இரண்டு குயில் இணைந்திடும் நாளும்
இரவு பகல் இசைத்திடும் கானம்


தேவனின் தீர்ப்பிது யார் இதை மறுப்பது

காதல்தான் என்றுமே
கடைசியில் ஜெயிப்பது

உனது நிழல் எனக்கில்லை என்று
உயிரை விட நினைத்தது உண்டு
உனது துணை கிடைத்தது இங்கு
உயிரை விட உயர்ந்தது என்று

ராகமும் தாளமும் ஓர் வகை மூலிகை
சோகங்கள் தீர்ந்தன பூத்தது பூ நகை
வாவா வாவா அன்பே

வா வா கண்மணி வாசல் தேடி வா

வா வா மன்னவா வாசல் தேடி வா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

வா வா கண்மணி வாசல் தேடி வா

வா வா மன்னவா வாசல் தேடி வா