Vaa Vaa Mannava |
---|
வா வா ஆ மன்னவா ஆ
வா வா ஆ மன்னவா ஆ
வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
வா வா மன்னவா
வா வா ஆ மன்னவா ஆ
ஓ உறவை ஒரு சிலுவையப் போலே
உயிரில் தினம் சுமப்பதனாலே
இரவில் விழி துயில்வதும் இல்லை
இசையை மனம் பயில்வதும் இல்லை
வீணையும் விரலகளும் விலகியே வாழுமா
விலகினால் தந்திகள் தேன் இசை வார்க்குமா
விழியில் வழி வழிந்தது கண்ணீர்
வேரில் வந்து விழுந்தது வெந்நீர்
உடலில் ஒரு உணர்ச்சியும் இல்லை
மனதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை
ஆடலும் பாடலும் நீ தரும் சீதனம்
தென்றல் நீ இல்லையேல் பூக்குமா பூ வனம்
வாவா வாவா அன்பே
வா வா கண்மணி
வா வா ஆ கண்மணி
வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி
ஆ ஆ மறந்து விடு பிரிவென்னும் சொல்லை
பிரிவு இந்தப் பிறவியில் இல்லை
உறவில் இங்கு நமக்கொரு எல்லை
வகுத்து வைக்க ஒருவனும் இல்லை
ஆணைகள் இடுவதால்
அலை கடல் அடங்குமா
குடைகளை விரிப்பதால்
அடை மழை நடுங்குமா
தனலில் வைத்த மெழுகென இங்கு
தவித்த மனம் பிழைத்தது இன்று
தலைவன் உந்தன் வருகையைக் கண்டு
தனிமை இங்கு விடை பெறும் இன்று
காதலின் காவியம் காலத்தை வெல்வது
மேனியை நிழல் தொட
யார் என்ன சொல்வது
வாவா வாவா அன்பே
வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா