Vaa Vaa Pudhu Kavithaigal

Vaa Vaa Pudhu Kavithaigal Song Lyrics In English


வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்
இல்லைஇல்லைஇல்லை
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்

வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே

ஆஅஆஆஆஆ
போலி வேஷம் போதும் பெண்ணே
தாலி செய்தேன் வாடி கண்ணே
சாமி பக்தி அது நம்மை மிரட்டும்
ஜாதி பேதம் அது படை திரட்டும்
வாடி பெண்ணே வருவது வரட்டும்

அம்மன் என்றால் எனை இன்று எரித்திடு
பெண்மை என்றால் பேர் சொல்லி அழைத்திடு
வாழ்க்கையில் அழுவது முதல் முறை துடைத்துவிடு

வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியேஏ
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்
இல்லைஇல்லைஇல்லை
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்


வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியேஏ

காதல் கொண்ட காலம் எங்கே
கண்கள் பாடும் கானம் எங்கே
பாடல் சொன்னேன் அது நினைவில்லையா
பாதம் தொட்டேன் அது நினைவில்லையா
நான் யார் நீ யார் அது நினைவில்லையா

விழிகளை மறந்தது இந்தன் பெயர் இமையல்ல
நகர்வதை மறந்தது இதன் பெயர் நதியல்ல
இதயத்தில் எழுதிய உறவுகள்
இறப்பதற்கல்ல

ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ